நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நேற்று காலை வண்டிகேட் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.