அமைச்சர் மனோ தங்கராஜ் திராவிட மாடலுக்கும் குஜராத் மாடலுக்கும் விளக்கம் அளித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தலைவர் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த படங்களை மாற்ற 13 கோடி செலவாகும் என்று தெரிந்த போது அவற்றை மாற்ற வேண்டாம் அதற்கு செலவிடும் பணத்தை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தலாம் என்று முதல்வர் கூறிவிட்டார். இதுதான் திராவிட மாடல். இன்று பிரதமர் மோடி தன் படத்தை தானியங்கள் வழங்கும் பைகளில் ஒட்ட 15 கோடி செலவிடுகின்றார். இதுதான் சமூக நீதி அரசியலுக்கும் ஏக போக சர்வாதிகார அரசுக்கும் உள்ள வேறுபாடு என்று விளக்கம் அளித்துள்ளார்