மத்திய பிரதேசம் மாநிலத்தில் தாமோஹ் என்ற பகுதியை சேர்ந்த தீபக் சோனி என்ற நபர் காணாமல் போன தன்னுடைய செல்லக் கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்குவதாக இணையத்தில் அறிவித்துள்ளார். அவர் வளர்த்து வந்த கிளி வீட்டில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பறந்து சென்றது. இதனைத் தொடர்ந்து அதன் இருப்பிடத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசாக தீபக் அறிவித்து நகரின் பல இடங்களில் போஸ்டர்களையும் ஒட்டினார். மேலும் ஆட்டோக்களில் மைக் பொருத்தி கிளி காணாமல் போனது குறித்து மக்களுக்கு அவர் தெரிவித்து வருகிறார்.