ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு விநாயகர் பெருமானை போன்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு மருத்துவமனையில் வித்தியாசமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததால் மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். குழந்தையின் முகம் ஒரு தண்டு போன்ற வடிவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துரதிஷ்டவசமாக பிறந்த 20 நிமிடத்தில் குழந்தை உயிரிழந்தது. இந்த விசித்திரமான குழந்தையை பார்க்க மக்கள் பலரும் அங்கு குவிந்தனர். மரபணு குறைபாடுகள் காரணமாக இதை நிகழ்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.