தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர். புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சரியான திட்டமிடல் இல்லை…. அமைச்சர் சேகர் பாபு….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more