கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விசா, ரூபே, மாஸ்டர் கார்டு போன்ற நெட்வொர்க்கை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே வாடிக்கையாளராக இருந்தால் கிரெடிட் கார்டை புதுப்பிக்கும் போது நெட்வொர்க்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். ஆறு மாதங்களில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.