“மைதானத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டுவது வேறு, அநாகரீகமாக நடப்பது வேறு” என்பதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரகுவன்ஷிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் மூலம் உணர்த்தியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியின் போது, பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக (Obstructing the field) நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த ரகுவன்ஷி, மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது பேட்டை பவுண்டரி லைனில் ஓங்கி அடித்ததோடு, கையில் இருந்த ஹெல்மெட்டை ஆக்ரோஷமாகத் தூக்கி வீசினார்.

​இந்தச் செயல் ஐபிஎல் நன்னடத்தை விதிகளை (Code of Conduct) மீறுவதாக அமைந்ததால், ரகுவன்ஷிக்கு அவரது போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஒரு இளம் வீரர் இதுபோன்று நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் கிரிக்கெட் உணர்விற்கு எதிரானது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் கேகேஆர் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.