கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செல்லங்கோணம் பகுதியில் சோபனேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு சுரேஷ்குமார் மயங்கி விழுந்தார்.

அவரை சக தொழிலாளர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் சுரேஷ்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.