சென்னை ஈசிஆரில் உள்ள  பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக  காவல்துறைக்கு  புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் – ஜெயலட்சுமி தம்பதி கடந்த 2018ஆம் ஆண்டு முதல்,   பேஸ்புக்கில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி, கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என வலை வீசியுள்ளனர். ஒரு நபருக்கு ரூ.13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர்.  இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.