தமிழகத்தில் தற்போது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் NSS அமைப்பு மூலம் சிறப்பு முகாம் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து பள்ளிகள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.