தமிழகத்தில் கமர்சியல் மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறி சிறுகுறு நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 50,000 நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படியான மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.