திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியில் 2வது முறையாக ஆட்சி செய்யும் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது. இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறதா தமிழகத்தில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது.

கவலையின்றி மக்களை சந்தியுங்கள். யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள். இந்திய நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக முகவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.