சாலையோரம் குனிந்து காலணி வாரைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு நபர், எதிர்பாராத விதமாக அதிவேகமாகப் பின்னோக்கி வந்த ஒரு வேன் மோதி நிலைதடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் விபத்தில், அந்த வேனின் சக்கரங்கள் அவர் மீது ஏறவிருந்த நிலையில், அவர் சாமர்த்தியமாகப் பக்கவாட்டில் உருண்டு விலகியதால் உயிர் தப்பினார்.

மேலும் பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்த இந்தக் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவறான கோணத்தில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

“>

அதிர்ஷ்டவசமாக அந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தாலும், இந்தச் சம்பவம் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்ததாக” அந்த நபர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்கள் வாகனத்தைப் பின்னோக்கி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.