முதலைகள் நிறைந்த ஏரியின் அருகே நின்று கொண்டு துணிச்சலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ முதலையை வம்பிழுக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் ஒரு குச்சியுடன் ஏரிக்கரையில் நிற்கும் அந்த நபர், தண்ணீரை அசைத்து முதலையைத் தன்னை நோக்கி அழைப்பதைக் காண முடிகிறது.
திடீரென ஒரு முதலை அவரைத் தாக்க முயல, அவர் லாவகமாகப் பின்வாங்குகிறார். இந்த விபரீத விளையாட்டைப் பார்த்த இணையவாசிகள், இது வீரமா அல்லது முட்டாள்தனமா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளனர். ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
There is a very thin line between bravery and stupidity 😐 pic.twitter.com/0mnVtaSqnT
— The Instigator (@Am_Blujay) December 22, 2025
சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, ஆபத்தான விலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு கொடியது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
