திருவண்ணாமலை திருவிழாவிற்கான அனுமதி சீட்டுகளை வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபத்தை காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகளும், மாலையில் மகா தீபத்தை காண 600 ரூபாய்க்கு ஆயிரம் அனுமதி சீட்டுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அனுமதி சீட்டுகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்