வருகின்ற பொதுத் தேர்தலில் அடிமைகளையும் அவர்களின் எஜமானர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து முதல்வர் ஸ்டாலின் விடியலை தர உள்ளார் என்று அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி, பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியைப் பார்த்து பயப்படுகிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பியடிப்பதே பாஜகவின் வேலை என்றும் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.