சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி கேஸ் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, ஜாதி வாரியான கணக்கெடுப்பு, ஆண்டுக்கு நான்காயிரம் ரூபாய் போனஸ் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜாதிவாரியான கணக்கெடுப்புக்கு பிறகு பின் தங்கிய வகுப்பினருக்கு சிறப்பு கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.