பெரும்பாலானவர்களுக்கும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காபி குடிக்காமல் அந்த நாளே  ஓடாது என்று சொல்லும் நபர்கள் தான் அதிகம். இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். காபி குடித்தவுடன் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். காபியிலிருக்கும் காப்பின் எனும் வேதிப்பொருள் தான் ரத்தத்தில் அதிகரித்து காப்பியை குடித்தவுடன் உடனடியாக ரத்த செல்களுக்கு புத்துணர்ச்சி வழங்கி மூலையில் சுறுசுறுப்பு உணர்வை தோன்றுகிறது.

காபியை சரியான முறையில் சேமித்து வைக்கவிட்டால் காஃபியானது இறுகி அதன் அமைப்பு வாசனை,  சுவை போன்றவை மாறக்கூடும். ஆனால் கெட்டுப் போகக்கூடிய உணவு பொருட்களை போல காபி காலாவதி ஆகாது.. சீல் செய்யப்பட்ட காபி பாக்கெட்டுகளை பல வருடங்களுக்கு பிரஷ் ஆகவும் அதை நறுமணத்தோடும் வைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். காபி பொடியை காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும்.

காபி வெளிச்சத்திற்கு உறையும் கொண்டது. இதனால் அதனுடைய சுவை குறையலாம். எனவே எப்பொழுதும் காபி பொடி வெளிச்சம் உள்ளே நுழையாத டப்பாக்களில் சேமித்து வைப்பது நல்லது . காபி டப்பாவை எப்பொழுதுமே குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும். வெப்பம் மற்றும் சூரிய வெளிச்சத்தில் விலக்கி வைக்க வேண்டும் .அடுப்பு அல்லது வெப்பத்தை உருவாக்கக்கூடிய பிற பொருள்களுக்கு அருகில் காபி பொடியை சேமித்து வைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் காபி பொடியை சேமித்து வைக்க வேண்டாம்.