பிரபல சின்னத்திரை நடிகை பவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலம் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவானி சகப் போட்டியாளரான அமீர் என்பவரை காதலிக்க தொடங்கினார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் சொல்லுவோம் என அமீர் மற்றும் பவானி கூறியுள்ளனர். இதனால் அமீர் பவானிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அஜித் நடித்த தெலுங்கு திரைப்படத்தில் அமீர் மற்றும் பவானி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.