மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட இளைஞர் தனஞ்சய் பாரிக் என்பதும் இவர் மைதான பராமரிப்பாளரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

இளைஞரை காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தத்தினால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.