திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தடைந்தார். தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு சின்னமாக  ஜல்லிக்கட்டு காளை வழங்கப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த மாநாட்டை பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல இருக்கிறது.”என் மண் என் மக்கள்” யாத்திரை மூலம் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும். தமிழ் மொழி மிகவும் பழமையானது, பல்வேறு சிறப்புகளை கொண்டது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். 2024 இல் தமிழகத்தில் அதிகமாக பாஜகவை மட்டும் பற்றி தான் பேசுகின்றனர். தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் உள்ளது என்பதை இந்த கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல வழிகளில் துணை நிற்கிறது. 1991 ஆம் ஆண்டு எனது யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தான் தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தான் பயணத்தை தொடங்கினேன். நாடு தான் முதன்மை என பாஜக கருதுகிறது. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர். தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. அரசியல் சாசனத்தில் 370 பிரிவை ரத்து செய்து வரலாற்று சாதனை செய்துள்ளோம். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. மோடி அளித்த உறுதியால் தமிழகத்தில் மகளிர் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது. மத்தியில் திமுக 10 ஆண்டு அங்கம் வகித்த போதிலும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் பாஜகவின் வளம் பெருகுவதை தடுக்க கொள்ளையர்கள் முயல்கின்றனர். தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் கொடுத்துள்ளோம்.

மோடியின் உத்தரவாதத்தின் கீழ் இலவச ரேஷன் அரிசி, வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படுகிறது. தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்து பார்த்தேன். தமிழகத்தில் எம்ஜிஆர் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.ஜெயலலிதா தமிழக மக்களுடன் எந்த மாதிரியான தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். தமிழக மக்கள் புத்திசாலிகள்.. இதயத்தால் தூய்மையானவர்கள்.. எம்ஜிஆர் வாரிசு அரசியலுக்கு எதிராக போராடியவர்.

தமிழகத்தில் திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் ஜெயலலிதா. நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி சுகாதாரத்தை கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் வளர்ச்சிக்காக பணியாற்றினார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. எம்ஜிஆரை அவமானப்படுத்தும் வகையில் திமுக ஆட்சி புரிந்து வருகிறது. தமிழகத்தில் 3.5 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறோம். நாடு வளரும் வேகத்தில் தமிழகமும் வளரும்” என தெரிவித்தார்.