தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து வெயில்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவும்.

ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்பதால், முதியவர்கள், சிறுவர்கள் பிற்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.