சீனாவை சேர்ந்த லியூ என்ற பெண் தனது 23 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். ஆனால் அந்த பெண் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது பிள்ளைகள் ஒரு முறையும் வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த பெண் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதியுள்ளார். தற்போது அவருக்கு இருக்கும் ஒரே வழி நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும் பூனைகளையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதுதான் எனக் கூறப்படுகிறது.