“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, தலைமை செயலாளர் வே. இறையன்பு 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.