கேரளா மாநிலத்தில் கல்விக்கு வயது தடையில்லை என உலகுக்கு உணர்த்திய கார்த்தியாயினி பாட்டி 101 வயதில் காலமானார். கேரள மாநில அரசு அறிமுகப்படுத்திய எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியறிவு மிகுந்த பெண்மணி என்ற சாதனையை படைத்தார். கடலுார் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சீப்பாத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

கார்த்தியாயினி அம்மாவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் கார்த்தியாயினி அம்மாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று (வியாழன்) காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.