தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பட்டதாரிகள் என்ற இணையதளம் மூலமாக தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.