இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய மக்கள் பலரும் அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கியுள்ளனர். இதனால் அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மஞ்சள் நிலையும் செயல்படும் நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அஞ்சல் அலுவலகம் காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் பணிக்கு செல்பவர்கள் அஞ்சலக சேவைகளை பெற முடியாத சூழல் நிலவியது. இதனை கருதி அனைவரும் அஞ்சலக சேவையை பெறும் வகையில் இனி அஞ்சலகம் காலை 8:00 மணி முதல் சுழற்சி முறையில் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆதார் சேவை மையமும் விரைவில் 12 மணி நேர சேவையாக மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.