மிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதிகளிலும் விண்ணப் பதிவு முகாம் அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 500 குடும்ப அட்டைக்கு ஒரு தன்னார்வலர், 1500 குடும்ப அட்டைகள் கொண்ட நியாய விலைக் கடையில் 3 தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவதாகவும், VAO, ஊராட்சி செயலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோரை பொறுப்பு அலுவலர்களாக நியமிக்குமாறும் கூறப்பட்டுள்ளது