சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக புகாரளித்த கேரளாவை சேர்ந்த பெண்ணிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அடையாறு உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசார் கேரளா விரைந்தனர். தற்போது ஹரி பத்மன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.