
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி சென்றவர்கள் யார் என்றும் குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.