கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா காதில் பூ வைத்துக்கொண்டு சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். அதேபோல்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏழு கோடி மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் கர்நாடகா அரசின் பட்ஜெட் போலியானது எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.