கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழலில், டி.கே.சிவக்குமாருக்கு ஆனந்த கண்ணீர் வந்துள்ளது. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி  என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.