கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது “கர்நாடக தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போலவே உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தன்னை முன்னிறுத்தி வாக்கு சேகரித்தார். எனவே இதை பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வியாகவே பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.