கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை தமிழகத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.