ஜெர்மனியில் இருந்து 3000 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெதர்லேண்ட் கடற் பகுதியில் வைத்து அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் இந்திய மாலுமி உயிரிழந்துள்ளார். இது குறித்து இந்திய தூதரகம் “இறந்த மாலுமியின் குடும்பத்தினருடன் நாங்கள் பேசியுள்ளோம். இந்தியாவிற்கு அவரது உடலை கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். காயம் அடைந்த 20 பேருடனும் பேசியுள்ளோம். மேலும் கப்பல் நிறுவனத்திடம் இருந்து நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் எங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.