கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வான விஜயதாரணி இந்த முறை எம்பி சீட்டு கேட்டு, மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸிலிருந்து விலகி ஜே பி நட்டா தலைமையில் இன்று அல்லது நாளை பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பாஜகவில் சேர்க்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்காமல் இருந்து வரும் விஜயதாரணி டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ளார். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் பாஜகவில் சேர உள்ளதாக கூறப்படுகின்றது. அதனைப் போல காங்கிரஸ் தலைமை விஜயதாரணையை சமாதானப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது.