இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யானின் முதற்கட்ட சோதனை இன்று  நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின்படி 3 விண்வெளி வீரர்கள் சுமார் 400 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலம் அனுப்பப்படுவார்கள். அதற்கான சோதனையில், 17கிமீ உயரத்திற்கு இன்று ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டு மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்பட இருக்கிறது. இன்று  காலை 7.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது