கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரான மிக்கேல் ரடுகா என்பவர் கனவுகளை கட்டுப்படுத்தும் சிப் ஒன்றை தயார் செய்து அதனை தனது மண்டை ஓட்டிற்குள் வைத்து பரிசோதித்துப் பார்க்க முயற்சித்துள்ளார்.

இதற்காக அவரது தலையை அவரே ட்ரில் செய்து சிப்பை வெற்றிகரமாக வைக்கவும் செய்து விட்டார்.  அதன் பிறகு ஐந்து வாரம் கழித்து அந்த சிப்பை மருத்துவர்களின் உதவியுடன் எடுத்துவிட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.