தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கல்வி நிலையங்கள் என்று செயல்படாது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.