கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் இன்று மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.