கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.