தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11ஆம் தேதி தொடங்கி இருபத்தாம் தேதி வரை நடக்கிறது. அரையாண்டு தேர்வு இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில் மாணவர்கள் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வு முடிவடைந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதியிலிருந்து விடுமுறை தொடங்குகிறது. இந்த தேர்வு முடிவடைந்து 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.