கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமழை தொடர்ந்து வருவதால் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.