
ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் உடனடியாக அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.