சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதேசமயம் சில வீடியோக்கள் வினோதமாக இருக்கும் நிலையில் இதனை வசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

அதாவது அந்த புகைப்படத்தில் தலை இல்லாமல் காவலாளி ஒருவர் கடை வாசலில் அமர்ந்து காவல் காக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. காவலாளி சீருடை அணிந்திருக்கும் அந்த நபர் தலை இல்லாமல் இருப்பது எப்படி என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது குழப்பத்தை ஏற்படுத்தும் படம் எனவும் கூறி இது ஏதோ மேஜிக் போல உள்ளது எனவும் கூறி வருகிறார்கள். அதேசமயம் தொழில்நுட்பத்தைக் கொண்டு இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.