ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கலுக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவர்.

பின்னர் செய்தியாளர்களை பேசிய அவர், மது குடித்து இறந்தவர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். மதுவினால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பை அரசே ஏற்க வேண்டும். கடல் நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சின்டெக்ஸ டேங்க் அமைக்க வேண்டும். பாட்டிலில் குடிநீரை விற்பனை செய்யக்கூடாது என கூறியுள்ளார்.