விருதுநகர் வேட்பாளர் கௌசிக் பாண்டியன் ஓமனில் படித்ததால் அவருக்கு தமிழ் வரவில்லை என சீமான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமில்லை. வீழ்வது நாமாகினும், வாழ்வது தமிழாகட்டும் என்ற வெற்று முழக்கத்தை வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.

என் மகன்கள் இருவரும் ஆங்கில வழிக் கல்வி படிக்கிறார்கள். அதற்கு நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை என அவர் தெரிவித்தார்.