
சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்..
தமிழ்நாடு அரசு சார்பில் கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க உள்ள நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சில மீனவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிட் மனுவில், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அந்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. மேலும் இதனால் கடலில் இருக்கக்கூடிய வளங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக பேனா சின்னம் அமைக்கப்பட்டால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
சுற்றுச்சூழலுக்கும் ஒரு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த பேனா சின்னம் அமைப்பிற்கு அனுமதி வழங்கக்கூடாது. தமிழக அரசினுடைய இந்த முடிவு என்பது உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக இருப்பதால் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு மீனவர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
ஏற்கனவே பல இது போன்ற வழக்குகளை, சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இந்த ஒரு முடிவானது இருக்கிறது என்பதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. அதேபோல இந்த வழக்கு ஏற்றுக் கொள்வது அல்லது இந்த வழக்கை சுற்றுச்சூழல் தொடர்பாக விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தான் அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை மாற்ற போகிறதா அல்லது உச்சநீதிமன்றமே இந்த வழக்கை எடுத்து விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.. எதுவாக இருந்தாலும் கடலில் பேனா சின்னம் வைப்பதால் முற்றிலுமாக மீனவர்களுடைய வாழ்வாரம் பாதிக்கப்படும் என்ற விரிவான கருத்துக்களுடன் தற்போது தமிழக மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.