தமிழ்நாடு செலுத்தும் வரியில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி அளித்து வருவதால் உதயநிதி தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்ற விமர்சித்து வருகின்றார். அதனைப் போலவே தொடர்ந்து பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று உதயநிதி அழைத்து வந்தால், உதயநிதியை இனி நாங்கள் கஞ்சா உதயநிதி என்று அழைக்க நேரிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, நாங்கள் மரியாதையாக அரசியல் செய்து வரும் போதிலும் நீங்கள் கோட்டை தாண்டினால் நாங்களும் தாண்ட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.