பெண்கள் சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1,000 கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என உதயநிதி தெரிவித்துள்ளார். கரூரில் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சில பெண்களுக்கு தகுதி இருந்தும் அவர்களுக்கு ₹1,000 கிடைக்கவில்லை என்பது உண்மை தான் எனக் கூறினார். மேலும், தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.